இங்கிலாந்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 138-பேர் உயிரிழப்பு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21,961-பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,
இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவலால் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,961-பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில் தொற்று பாதிபுக்கு 138-பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 17 ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.
தொற்று பாதிப்பில் இருந்து இன்று 16,479-பேர் குணம் அடைந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,29,881- ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story