ரஷியாவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து மூழ்கியது; 8 பேர் பலி


ரஷியாவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து மூழ்கியது; 8 பேர் பலி
x
தினத்தந்தி 12 Aug 2021 10:32 PM GMT (Updated: 12 Aug 2021 10:32 PM GMT)

ரஷிய நாட்டில் கம்சாத்கா தீபகற்பத்தில் உள்ள குரில் ஏரியில் நேற்று ஒரு சுற்றுலா ஹெலிகாப்டர் விழுந்து மூழ்கியது. இந்த ஹெலிகாப்டரில் 16 சுற்றுலா பயணிகளும், சிப்பந்திகளும் பயணித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 60 மீட்பு படை வீரர்களும், நீர்மூழ்கி வீரர்களும் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வித்யாஜ் ஏரோ நிறுவனத்துக்குரிய இந்த எம்.ஐ.-8 ரக ஹெலிகாப்டர், ஏரியின் 420 அடி ஆழத்துக்கு சென்று விட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளதாக அஞ்சப்படுகிறது. 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பெட்ரோபாவ்லவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகர் அருகே உள்ள எரிமலை பகுதிக்கு சென்றபோதுதான் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்கிறது. தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது.

Next Story