இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு இன்று முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் - இண்டிகோ நிறுவனம் தகவல்
இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு இன்று முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
துபாய்,
இந்தியாவில் இருந்து அமீரகம் வருகை புரிய அனுமதி வழங்கப்பட்டதில் இருந்து இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது.
இதில் பலர் விமான நிலையத்துக்கு வருகை புரியும்போது ஆர்.டி. பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளாமல் வருகை தந்ததை முன்னிட்டு அந்த நிறுவனம் விமானங்களை வருகிற 24-ந் தேதி வரை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் ரத்து செய்யப்பட்ட விமான சேவை இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு தொடங்கும் என அந்த விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விமான சேவை ரத்து செய்யப்பட்டதற்கு நடைமுறை செயல்பாட்டு பிரச்சினை என அந்த நிறுவனத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story