ஸ்பெயின்: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 52 பேர் பலி?


ஸ்பெயின்: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 52 பேர் பலி?
x
தினத்தந்தி 20 Aug 2021 10:56 PM GMT (Updated: 20 Aug 2021 10:56 PM GMT)

ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகள் அருகே அட்லாண்டிக் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ள சம்பவத்தில் 52 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மாட்ரிட்,

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட் நாட்டில் இருந்து 53 அகதிகளுடன் படகு ஒன்று அட்லாண்டிக் கடல் வழியாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் நோக்கத்தோடு கடந்த வாரம் படகு ஒன்று புறப்பட்டது.

அந்த படகு ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகளுக்கு 220 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்திகொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான படகு கடலில் மூழ்கியது. இதனால், படகில் பயணம் செய்த அகதிகள் அனைவரும் கடலில் விழுந்துள்ளனர். 

விபத்து நடந்து பல மணி நேரங்கள் கழித்து அவ்வழியாக வந்த சரக்கு கப்பல் இந்த விபத்து குறித்து ஸ்பெயின் கடற்படையினருக்கு தகவல் கொடுத்தது. 

அந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்பெயின் கடற்படையினர் விபத்துக்குள்ளான படகு மூழ்கிய இடத்திற்கு சென்றனர். அங்கு விபத்துக்குள்ளான படகின் பாகங்களை பிடித்துக்கொண்டு ஒரே ஒரு பெண் மட்டுமே உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். 

அந்த பெண்ணை மீட்ட ஸ்பெயின் கடற்படையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஞ்சிய 52 பேரும் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் ஸ்பெயின் கடற்படையினர் மாயமானவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

விபத்து நடந்த பல மணி நேரம் ஆனதால் கடலில் மூழ்கிய 52 அகதிகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

Next Story