பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு


பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 22 Aug 2021 8:27 PM GMT (Updated: 22 Aug 2021 8:27 PM GMT)

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்,

ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து பதற்றத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. அங்குள்ள வெளிநாட்டினர் மட்டுமல்லாது உள்நாட்டினரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினால் போதும் என்ற மன நிலையில் உள்ளனர்.

இதனால் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் கூட்டம் தொடர்ந்து அலை மோதுகிறது. விமான நிலையத்துக்கு வெளியேயும் ஒரு குழப்பமான சூழ்நிலை நீடிக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் நாட்டை விட்டு தப்பினால் போதும் என்ற நிலையில், விமான நிலையத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாடுகள் பலவும் சிறப்பு விமானங்களை தலைநகர் காபூலுக்கு அனுப்பி தங்கள் குடி மக்களை மீட்டு வரும் நிலையில், அண்டை நாடான பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது

Next Story