கொரோனா எப்படி தோன்றியது என்பது தொடர்பான அமெரிக்க உளவுத்துறை அறிக்கை விரைவில் வெளியீடு


கொரோனா எப்படி தோன்றியது என்பது தொடர்பான அமெரிக்க உளவுத்துறை அறிக்கை விரைவில் வெளியீடு
x
தினத்தந்தி 25 Aug 2021 12:26 AM GMT (Updated: 25 Aug 2021 12:26 AM GMT)

கொரோனா எப்படி தோன்றியது என்பது தொடர்பான அமெரிக்க உளவுத்துறை அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

வாஷிங்டன்,

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இதற்கிடையில்,கொரோனா எப்படி தோன்றியது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கொரோனா உருவானது குறித்து அமெரிக்க உளவுத்துறையின் விசாரணைக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டு இருந்தது. உளவுத்துறையும் விசாரித்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்தநிலையில், அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில், ரகசியம் காக்க தேவையில்லாத அறிக்கை விவரங்களை வெள்ளை மாளிகை விரைவில் வெளியிடுகிறது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜென் பிசாகி கூறுகையில், ‘‘முதலில், ஜனாதிபதியிடம் அறிக்கை விவரங்கள் எடுத்துரைக்கப்படும். அதனால், சரியான தேதியை கூற முடியவில்லை. 2 நாட்களில் இருந்து சில நாட்களுக்குள் அவை வெளியிடப்படும்’’ என்றார்.

Next Story