டெல்டா வைரசால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் அபாயம் அதிகரிப்பு - இங்கிலாந்து ஆய்வு முடிவு


டெல்டா வைரசால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் அபாயம் அதிகரிப்பு - இங்கிலாந்து ஆய்வு முடிவு
x
தினத்தந்தி 29 Aug 2021 6:23 AM GMT (Updated: 29 Aug 2021 6:23 AM GMT)

டெல்டா வைரசால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கும் அபாயம் அதிகமாக உள்ளது என இங்கிலாந்து ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

கொரோனாவின் உருமாறிய வைரசான டெல்டா வைரஸ், முதன்முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்டது. இப்போது அது உலகின் சுமார் 150 நாடுகளுக்கு பரவி விட்டது. இந்த வைரஸ்பற்றி இங்கிலாந்து பொது சுகாதாரத்துறையும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் கூட்டாக ஒரு ஆய்வு நடத்தி உள்ளன. இதன் முடிவுகள், தி லேன்செட் பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

இதன் முக்கிய அம்சங்கள்:-

* ஆல்பா வைரசுடன் ஒப்பிடும்போது, டெல்டா வைரசால் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் ஆபத்து அதிகமாக உள்ளது.

* டெல்டா வைரஸ் அதிகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளது.

* தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் டெல்டா வைரசால் பாதிக்கப்படுவது, சுகாதார பராமரிப்பு சேவைக்கு மிகப்பெரிய சுமையாக அமையும். இங்கிலாந்தில் 43 ஆயிரத்து 338 கொரோனா நோயாளிகளை கடந்த மார்ச்-மே மாதங்களில் ஆய்வு செய்து இந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story