மலேசியாவில் 17 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Aug 2021 6:01 PM GMT (Updated: 29 Aug 2021 6:01 PM GMT)

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்,

மலேசியாவில் அதிகரித்து கொரோனா பரவலால் அங்கு பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,579 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,06,089 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 285 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 087 ஆக உயர்ந்துள்ளது.

மலேசியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,845 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 14 லட்சத்து 22 ஆயிரத்து 005 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 2,67,997 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story