காஷ்மீர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது; தலீபான்கள்


காஷ்மீர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது; தலீபான்கள்
x
தினத்தந்தி 3 Sep 2021 8:22 PM GMT (Updated: 3 Sep 2021 8:22 PM GMT)

காஷ்மீர் உள்ளிட்ட உலகின் எந்த பகுதியிலும் வாழும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம் என தலீபான்கள் அறிவித்து உள்ளனர்.

இஸ்லாமாபாத், 

காஷ்மீர் உள்ளிட்ட உலகின் எந்த பகுதியிலும் வாழும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்போம் என தலீபான்கள் அறிவித்து உள்ளனர்.

தலீபான்களின் தோகா அரசியல் அலுவலக செய்தி தொடர்பாளர் சுகைல் ஷகீன் பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:- காஷ்மீர் உள்பட உலகின் எந்த பகுதியிலும் வாழும் முஸ்லிம்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம். 

அதாவது, முஸ்லிம்கள் உங்கள் மக்கள், உங்கள் சொந்த குடிமக்கள், உங்கள் சட்டத்தின் கீழ் அவர்களுக்கும் சம உரிமை உண்டு என அந்தந்த நாடுகளுக்கு நாங்கள் வலியுறுத்துவோம். காஷ்மீர் மற்றும் வேறு எந்த நாட்டிலும் வாழும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பது, முஸ்லிம்கள் என்ற முறையில் எங்கள் அமைப்பின் உரிமை ஆகும். இவ்வாறு சுகைல் ஷகீன் கூறினார்.

Next Story