இந்தியா - அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நவம்பரில் நடைபெறும்


இந்தியா - அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நவம்பரில் நடைபெறும்
x
தினத்தந்தி 4 Sep 2021 7:07 AM GMT (Updated: 4 Sep 2021 7:07 AM GMT)

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 2+2 பேச்சுவார்த்தை இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் என்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் என வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்சவர்த்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் உயர் அதிகாரிகள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் ஹர்சவர்த்தன் சிரிங்லா பேச்சு நடத்தினார். அப்போது நவம்பரில் இருநாடுகளுக்கு இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.ஆனால் தேதிகள் இன்னும் முடிவாகவில்லை என  சிரிங்லா தனது அமெரிக்க பயணத்தின் போது கூறினார்.

2+2 இன் கடைசி கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது, அடுத்த சந்திப்பு அமெரிக்காவால் நடத்தப்பட உள்ளது.


Next Story