சீனாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹெய்லாங்ஜியங் மாகாணத்தில் உள்ள கிட்டோய்ஹோ நகரில் இன்று காலை அதிக பாரமுள்ள சரக்குகளை ஏற்றி செல்லும் கனரக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
சாலையில் வேகமாக சென்ற போது திடீரென அந்த வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தறிகெட்டு ஓடிய அந்த வாகனம் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த ஒரு லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
கனரக வாகனம் மோதியதில் அந்த லாரி முற்றிலுமாக உருக்குலைந்து போனது. இந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story