நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம்


நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2021 8:20 PM GMT (Updated: 5 Sep 2021 8:20 PM GMT)

நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

ஆம்ஸ்டெர்டாம், 

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் கொரோனா அச்சம் காரணமாக வரும் 20 ஆம் தேதி முதல்  பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.  

உணவு விடுதிகள், பார்கள் மற்றும் நிகழ்ச்சி கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றில் 75 பேருக்கு மேல் கூடும் பட்சத்தில் கொரோனா நுழைவு பாஸ் வாங்க வேண்டியது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

அரசின் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்த் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் போராட்டம் நடைபெற்றது. 

Next Story