ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக ஆயிரம் பேருக்கும் கூடுதலாக கொரோனா பாதிப்பு


ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக ஆயிரம் பேருக்கும் கூடுதலாக கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 6 Sep 2021 8:59 AM GMT (Updated: 6 Sep 2021 8:59 AM GMT)

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக ஆயிரம் பேருக்கும் கூடுதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


கேன்பெர்ரா,

ஆஸ்திரேலியா நாட்டில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தடுப்பூசி பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.  இதுவரை அந்நாட்டில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 62 சதவீதம் பேர் முதல் டோசும், 38 சதவீதம் பேர் 2 டோசும் எடுத்துள்ளனர் என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இன்று காலை 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  தொடர்ந்து 10 நாட்களாக அந்த நாட்டில் ஆயிரம் பேருக்கும் கூடுதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


Next Story