பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க ரஷியா தயார் - புதின் அறிவிப்பு


பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க ரஷியா தயார் - புதின் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Sep 2021 11:19 PM GMT (Updated: 9 Sep 2021 11:19 PM GMT)

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க ரஷியா தயாராக இருப்பதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

மாஸ்கோ,

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பின் 13- வது உச்சி மாநாடு காணொளி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. 2012 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது முறையாக இந்த ஆண்டின் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தியது.

‘பிரிக்ஸ்' உச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது இது 2-வது முறையாகும். முன்னதாக 2016-ம் ஆண்டு கோவாவில் நடந்த மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்கினார்.  

இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு, ‘தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான பிரிக்ஸ் உள் ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெற்றது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பேசுகையில், நாம் இன்று செய்யும் வேலைகள் கணிசமானதகவும், பலனளிக்கும் வகையில் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் அனைத்து துறையிலும் தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பு வழங்க ரஷியா தயாராக உள்ளது என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்’ என்றார்.

Next Story