ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசு அங்கு அமைதியை நிலைநாட்டும் - பாகிஸ்தான் நம்பிக்கை


ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசு அங்கு அமைதியை நிலைநாட்டும் - பாகிஸ்தான் நம்பிக்கை
x
தினத்தந்தி 11 Sep 2021 2:12 AM GMT (Updated: 11 Sep 2021 2:12 AM GMT)

ஆப்கானிஸ்தானில் தற்போது அமைந்துள்ள இடைக்கால அரசு அங்கு அமைதியை கொண்டு வரும் என பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத், 

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த போருக்கு பின்னர் அந்நாட்டு அரசை தலீபான்கள் கைப்பாற்றியுள்ளனர். கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் காபூல் வீழ்ந்த பின்னர் அங்கிருந்து பல்வேறு நாட்டினரும் பாதுகாப்பாக வெளியேறி சொந்த நாடுகளுக்கு சென்றனர். 

அமெரிக்க படை வீரர்களின் கடைசி விமானம் கடந்த 31-ந் தேதி காபூலில் இருந்து புறப்பட்டு சென்றது. தற்போது ஆப்கானிஸ்தான் முற்றிலுமாக தலீபான்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் அங்கு இடைக்கால அரசையும் தலீபான்கள் அமைத்துள்ளனர். தலீபான்களின் அரசுக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான புதிய இடைக்கால அரசு, போரால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டில் மீண்டும் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வரும் என்றும், ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான மற்றும் மேம்பாட்டுத் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் என்றும் பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு ஆளுகைக் கட்டமைப்பின் தேவையை நிவர்த்தி செய்ய புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவது உட்பட ஆப்கானிஸ்தானில் வளர்ந்து வரும் சூழ்நிலையை பாகிஸ்தான் நெருக்கமாகப் பின்பற்றுகிறது என்று 

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் அசிம் இஃப்திகார் அகமது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆப்கானிஸ்தானின் அமைதி மீது பாகிஸ்தான் தீவிர அக்கறை கொண்டுள்ளது. தலீபான்கள் தலைமையிலான இடைக்கால அரசு ஆப்கானிஸ்தானில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதோடு, ஆப்கானிஸ்தான் மக்களின் மனிதாபிமான மற்றும் மேம்பாட்டுத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கான புதிய முயற்சிகள் உறுதி செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மனிதாபிமான நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக ஆப்கானிஸ்தான் மக்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் சர்வதேச சமூகம் உரிய பங்கை வகிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story