ரஷ்யா-பெலாரஸ் ராணுவப் படைகள் போர் ஒத்திகை


ரஷ்யா-பெலாரஸ் ராணுவப் படைகள் போர் ஒத்திகை
x
தினத்தந்தி 14 Sep 2021 5:31 AM GMT (Updated: 14 Sep 2021 5:31 AM GMT)

ரஷ்யா-பெலாரஸ் ராணுவப் படைகள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.

மாஸ்கோ,

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ராணுவங்கள் இணைந்து போர் ஒத்திகையை மேற்கொண்டு வருகின்றன. இதில் சுமார் 2 லட்சம் ரஷ்ய  படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ZAPAD-2021 என்ற பெயரில் ரஷ்யாவில் இந்த ஒத்திகை நடைபெற்று வருகிறது. 

இரு நாட்டு வீரர்களும் எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து நவீன ஆயுதங்களை கொண்டு பயிற்சி மேற்கொண்டுள்ளனர். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டேங்கர்கள் உள்ளிட்டவைகளை போர் பயிற்சியில் ஈடுபடுத்தினர். 

இந்த போர் பயிற்சிகளை ரஷ்ய அதிபர் புதின் நேரில் பார்வையிட்டார். நேட்டோ படைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அச்சமூட்டும் வகையில் ரஷ்யா இத்தகைய போர் ஒத்திகைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story