பாகிஸ்தானில் பாதுகாப்பு படை என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
பாகிஸ்தானின் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
லாகூர்,
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவில் வடக்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் உளவு தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது.
கடந்த புதன்கிழமை தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தானிய வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் மீது நடந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-ஐ-தலீபான்கள் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.
Related Tags :
Next Story