சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்


சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 18 Sep 2021 4:11 PM GMT (Updated: 18 Sep 2021 4:11 PM GMT)

சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பீஜிங், 

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் அங்கு இன்று உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் சீனாவில் 62 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதில் 31 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 15 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் சீன சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 95,623 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story