இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74 லட்சத்தை தாண்டியது!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Sep 2021 4:55 PM GMT (Updated: 18 Sep 2021 4:55 PM GMT)

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,144 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 74,00,739 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 164 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 147 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,673 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 59 லட்சத்து 58 ஆயிரத்து 691 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 13,06,901 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Story