ரஷியா பல்கலைக்கழகத்தில் மர்மநபர் துப்பாக்கி சூடு ; 8 பேர் பலி


ரஷியா பல்கலைக்கழகத்தில் மர்மநபர் துப்பாக்கி சூடு ; 8 பேர் பலி
x
தினத்தந்தி 20 Sep 2021 8:34 AM GMT (Updated: 20 Sep 2021 8:34 AM GMT)

துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷிய போலீசார் தெரிவித்துள்ளனர்

மாஸ்கோ

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு கிழக்கே 1,300 கிலோமீட்டர் (800 மைல்) தொலைவில் உள்ளது பெர்ம் பல்கலைக்கழகம் . இன்று காலை 11 மணிக்கு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த  மர்ம மனிதர் ஒருவர் திடீர் என துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள்  ஜன்னல் வழியாக குதித்து தப்பினர்.இந்த துப்பாக்கி சூட்டில்   8 பேர் பலியானார்கள்  10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷிய போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.


Next Story