ஸ்பெயின் நாட்டில் எரிமலை சீற்றம் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்


ஸ்பெயின் நாட்டில் எரிமலை சீற்றம் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
x

ஸ்பெயின் நாட்டின் கனரி தீவில் உள்ள எரிமலையில் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டின் கனரி தீவுக்கூட்டங்களில் ஒன்றான லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் நேற்று திடீரென சீற்றம் ஏற்பட்டது. கரும்புகையுடன் எரிமலை வெடித்து சிதறி எரிமலை குழம்பு வெளியேறத்தொடங்கியது.

எரிமலை குழம்பு மக்கள் வசித்து வந்த குடியிருப்பு பகுதிகளையும் எட்டியது. இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

எரிமலை சீற்றம் தொடர்ந்து நீடித்து வருவதாலும், எரிமலை குழம்பு தொடர்ந்து வெளியேறி வருவதாலும் அப்பகுதியில் ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எரிமலை சீற்றம் ஏற்பட்ட பகுதியில் இருந்து இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story