நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெலிங்டன்,
நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரான ஆக்லாந்தில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், உருமாறிய டெல்டா வைரசால், கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
இதனால், அந்நகரில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உணவகத்தில் பார்சல் வாங்கலாம். சிலவகையான அலுவலகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிகள் தொடர்ந்து மூடி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story