ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சூடு - தலீபான்கள் உள்பட 3 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சூடு - தலீபான்கள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 22 Sep 2021 9:01 AM GMT (Updated: 22 Sep 2021 9:01 AM GMT)

ஆப்கானிஸ்தானில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தலீபான்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கடந்த மாதம் தலீபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, அந்நாட்டின் ஆட்சி, அதிகாரம் உள்ளிட்டவை முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

தலீபான்கள் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் குழுக்கள் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும் அங்கு ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச்சாவடியில் தலீபான் அமைப்பினர் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த மர்மநபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தலீபான்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 2 தலீபான்கள், பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தலீபான்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை ஐ.எஸ். அமைப்பினர் அல்லது கிளர்ச்சியாளர்கள் நடத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story