கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தது இங்கிலாந்து


கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தது இங்கிலாந்து
x
தினத்தந்தி 22 Sep 2021 9:16 AM GMT (Updated: 22 Sep 2021 10:47 AM GMT)

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் பிரிட்டனில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது.

லண்டன்,

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் தற்போது செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூப் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் இந்த தடுப்பூசியை இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்தவை. காப்புரிமை இங்கிலாந்து நிறுவனத்திடம் உள்ளது.

ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் பிரிட்டனில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என  இங்கிலாந்து  அரசு கட்டாயப்படுத்துவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. 



Next Story