ஐநா கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா


ஐநா கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Sep 2021 12:13 PM GMT (Updated: 22 Sep 2021 12:13 PM GMT)

ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க், 

ஐக்கிய நாடுகள் அவையின் ஆண்டு பொதுக்கூட்டம்  அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதரத்துரை மந்திரி மார்சிலோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சோனராவுடன்   மார்சிலோ ஐநா கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். 

 தொற்று பாதித்த மார்சிலோ நலமாக இருப்பதாகவும், அவருடன் இருந்த மற்ற எவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரேசில் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்  மார்சிலோ நியூயார்க்கிலேயே 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளார்.


Next Story