ஆப்கானிஸ்தானில் சர்வதேச விமான சேவைகளை துவங்குமாறு தலீபான்கள் அழைப்பு


ஆப்கானிஸ்தானில் சர்வதேச விமான சேவைகளை துவங்குமாறு  தலீபான்கள் அழைப்பு
x
தினத்தந்தி 27 Sep 2021 9:59 AM GMT (Updated: 27 Sep 2021 9:59 AM GMT)

காபூல் விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகளை மீண்டும் துவங்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

காபூல், 

ஆப்கானிஸ்தானில் இருந்து மீண்டும் சர்வதேச விமான சேவையை துவங்குமாறு விமான நிறுவனங்களுக்கு தலீபான்கள் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்து சரி செய்யப்பட்டு விட்டன. சர்வதேச மற்றும் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் விமான நிலையம் தயாராகவுள்ளது. முன்பு போல் அனைத்து விமானங்களையும் இயக்க விமான நிறுவனங்கள் முன் வர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் துவங்கியதும் கடந்த  ஆகஸ்ட் 15  தேதி  ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க ராணுவம், ஆகஸ்ட்30-ம் தேதி அங்கிருந்து வெளியேறியது.  எனினும், குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானுக்கான வழக்கமான வர்த்தக விமான சேவை இன்னும் தொடங்கவில்லை. 


Next Story