பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிக்கு எதிராக இங்கிலாந்தில் போராட்டம்
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிக்கு எதிராக இங்கிலாந்தில் போராட்டம் நடைபெற்றது.
லண்டன்,
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சூழலில், பாகிஸ்தானுக்கு எதிராக லண்டனில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் பலுசிஸ்தான் மற்றும் சிந்த் வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் அடக்குமுறையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய அவர்கள், அந்நாட்டிற்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். மேலும், பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளிப்பதை இங்கிலாந்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story