தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் நாள் கணக்கில் தங்கியிருந்த 2 சிறுமிகள்..


தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் நாள் கணக்கில் தங்கியிருந்த 2 சிறுமிகள்..
x
தினத்தந்தி 3 Oct 2021 8:29 AM GMT (Updated: 3 Oct 2021 8:29 AM GMT)

பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் தாய் இறந்தது கூட தெரியாமல் அவர் உடலுடன் இருந்துள்ளனர் இரண்டு சிறுமிகள்.

பிரான்சு

வடமேற்கு பிரான்சில்  அடுக்குமாடி குடியிருப்பில் 5 மற்றும் 7 வயதாகும் சிறுமிகள், இறந்து போன தங்கள் தாயின் உடலுடன் பல நாட்கள் கழித்துள்ளனர்.

தொடர்ச்சியாக பள்ளிக்கு வராததால் பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் குடியிருப்புக்குச் சென்ற போலீசார் அங்கு அந்த சிறுமிகளின் தாய் இறந்திருப்பதை கண்டறிந்தனர். அதன்பின் போலீசார் சிறுமிகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு பராமரிப்பில் உள்ளனர்..

இறந்த  தாயுடன் அவர்கள் குடியிருப்பில் எவ்வளவு நாட்கள் இருந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சில நாட்கள் காத்திருந்து பின்னர் சிறுமிகளிடமிருந்து சாட்சி பெற இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story