பாகிஸ்தானில் நிலநடுக்கம்; 15 பேர் பலி
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 15 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என பேரிடர் மேலாண் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் நாட்டின் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 15 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என பேரிடர் மேலாண் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story