அமெரிக்காவில் சிறிய விமானம் விழுந்து தீப்பிடித்தது; 4 பேர் உடல் கருகி பலி


அமெரிக்காவில் சிறிய விமானம் விழுந்து தீப்பிடித்தது; 4 பேர் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 9 Oct 2021 5:11 PM GMT (Updated: 9 Oct 2021 5:34 PM GMT)

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் உள்ள டெகல்ப்-பீச்சட்ரீ விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 4 பேர் இருந்தனர்.

புறப்பட்ட சில நிமிடத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விமான நிலையத்துக்குள்ளேயே விழுந்தது. தரையில் மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அதற்குள் அந்த விமானம் முற்றிலுமாக தீயில் கருகி உருக்குலைந்து போனது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். இந்த விபத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனிடையே விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணம் என்ன என்பது தெரியவராத நிலையில் அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.


Next Story