மின் பற்றாக்குறையால் இருளில் மூழ்கியுள்ள லெபனான்
மின்சார பற்றாக்குறையால் லெபனான் நாடு முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது.
பெய்ரூட்,
கடந்த 2 ஆண்டுகளாக லெபனான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், அங்கு மின் உற்பத்தி நிலையங்களை இயக்க போதிய எரிபொருள் இல்லாமல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால், மின்சாரப் பற்றாக்குறையும் ஏற்பட்டு, லெபனான் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளது. சில இடங்களில் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மேலும், பல நாட்கள், மின் தடை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story