பாகிஸ்தானில் பெட்ரோல் பம்பில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி


பாகிஸ்தானில் பெட்ரோல் பம்பில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 9 பேர் பலி
x
தினத்தந்தி 11 Oct 2021 6:13 AM GMT (Updated: 11 Oct 2021 6:13 AM GMT)

பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.

லாகூர்,

பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெட்ரோல் பம்ப் ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கடந்த மாதம் இதேபோன்று, ராவல்பிண்டி நகரில் நடந்த மற்றொரு சம்பவத்தில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் சுட்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.  3 பேர் காயமடைந்தனர்.


Next Story