வலியே இல்லாத புதிய ஊசி கண்டுபிடிப்பு
ஊசியே இல்லாமல் லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருந்து செலுத்தும் வகையில் புதிய வகை சிரீஞ்சை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நெதர்லாந்து,
நெதர்லாந்தில் லேசர் தொழில்நுட்பத்தில், செலுத்தும்பொது வலிதெரியாத வகையில், ஊசியே இல்லாத சிரீஞ்சை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிரீஞ்சில் உள்ள லேசர் தொழில்நுட்பம் மருந்தை சூடாக்கி நீர்க்குமிழியாக மாற்றி நோயாளி மீது தெளிக்கும் போது தோலில் உள்ள நுண் துவாரங்களின் வழியாக உடலில் சென்று செயலாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிரீஞ்ச் மூலம் மருந்து செலுத்தும்போது, கொசுக்கடியை விட மிக குறைந்த அளவிலான உணர்ச்சியே ஏற்படும் என்றும் ஊசி போட்டுக் கொள்ள தயங்குபவர்களுக்காகவும் மருத்துவக் கழிவுகளை குறைக்கும் விதமாகவும் இந்த சிரீஞ்ச் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story