சீனாவில் புதிதாக 20 பேருக்கு கொரோனா


சீனாவில் புதிதாக 20 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 Oct 2021 10:35 PM GMT (Updated: 17 Oct 2021 10:35 PM GMT)

சீனாவில் கடந்த ஒரிரு மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

பீஜிங்,

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த ஒரிரு மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 19 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், ஒரு நபருக்கு உள்ளூர் தொடர்புகள் மூலம் தொற்று பரவியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை சீனாவில் கொரோனாவால் 4,636 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 96,522 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story