சீனாவில் ரசாயன ஆலை வெடிவிபத்து; 4 பேர் பலி


சீனாவில் ரசாயன ஆலை வெடிவிபத்து; 4 பேர் பலி
x
தினத்தந்தி 24 Oct 2021 12:41 AM GMT (Updated: 24 Oct 2021 12:41 AM GMT)

சீனாவில் ஏற்பட்ட ரசாயன ஆலை வெடிவிபத்தில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.


பெய்ஜிங்,

சீனாவின் வடக்கே இன்னர் மங்கோலியா சுயாட்சி பகுதியில் ரசாயன ஆலை ஒன்று அமைந்துள்ளது.  இதில், திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  3 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த வெடிவிபத்து நேற்று (சனிக்கிழமை) காலை அணைக்கப்பட்டு உள்ளது.  இந்த நிறுவனத்தின் சட்டப்பூர்வ பிரதிநிதியை உள்ளூர் போலீசார் பிடித்து சென்றுள்ளனர்.  நிறுவன உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.  இந்த விபத்திற்கான காரணம் பற்றி மண்டல அரசு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.


Next Story