இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து- 7 பேர் பலி


இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து- 7 பேர் பலி
x
தினத்தந்தி 23 Nov 2021 9:02 AM GMT (Updated: 23 Nov 2021 9:02 AM GMT)

பள்ளி மாணவர்கள் உள்பட 23 பேருடன் சென்று கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு,

இலங்கையின் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சிக்கேனி பகுதியில் இன்று படகு கவிழ்ந்து விபத்துக்குளானது.  கிண்ணியா - குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையே இருந்த புதிய பாலம் கட்டப்படுவதால், படகு போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது.  வழக்கம் போல் இன்று காலை படகு ஒன்று பள்ளி மாணவர்கள் உள்பட 23 பேருடன் சென்று கொண்டிருந்த போது  கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில்  7 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். 


Next Story