இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து- 7 பேர் பலி
பள்ளி மாணவர்கள் உள்பட 23 பேருடன் சென்று கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பு,
இலங்கையின் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சிக்கேனி பகுதியில் இன்று படகு கவிழ்ந்து விபத்துக்குளானது. கிண்ணியா - குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையே இருந்த புதிய பாலம் கட்டப்படுவதால், படகு போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது. வழக்கம் போல் இன்று காலை படகு ஒன்று பள்ளி மாணவர்கள் உள்பட 23 பேருடன் சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story