சூடானில் கிராமங்களை சூறையாடி, தீ வைத்து எரிப்பு; 43 பேர் பலி


சூடானில் கிராமங்களை சூறையாடி, தீ வைத்து எரிப்பு; 43 பேர் பலி
x
தினத்தந்தி 25 Nov 2021 4:59 PM GMT (Updated: 25 Nov 2021 4:59 PM GMT)

சூடான் நாட்டில் கிராமங்கள் மீது மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து, சூறையாடியதில் 43 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.



கார்டூம்,

சூடான் நாட்டின் மேற்கே டார்பர் மாகாணத்தில் உள்ள 46 கிராமங்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தி உள்ளனர்.  அதன்பின்பு அந்த கிராமங்களுக்கு தீ வைத்து எரித்து உள்ளனர்.  அங்கிருந்த பொருட்களை சூறையாடி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் 43 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  பலர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. அமைப்பின் மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.


Next Story