சூடானில் கிராமங்களை சூறையாடி, தீ வைத்து எரிப்பு; 43 பேர் பலி
தினத்தந்தி 25 Nov 2021 4:59 PM GMT (Updated: 25 Nov 2021 4:59 PM GMT)
Text Sizeசூடான் நாட்டில் கிராமங்கள் மீது மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து, சூறையாடியதில் 43 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
கார்டூம்,
சூடான் நாட்டின் மேற்கே டார்பர் மாகாணத்தில் உள்ள 46 கிராமங்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தி உள்ளனர். அதன்பின்பு அந்த கிராமங்களுக்கு தீ வைத்து எரித்து உள்ளனர். அங்கிருந்த பொருட்களை சூறையாடி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் 43 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. அமைப்பின் மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire