கொரோனா தொற்று அதிகரிப்பு: நியூயார்க்கில் அவசரநிலை பிறப்பிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Nov 2021 3:17 PM GMT (Updated: 27 Nov 2021 3:17 PM GMT)

புதிய கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருவதன் காரணமாக நியூயார்க்கில் அவசரகால நிலையை கவர்னர் பிறப்பித்தார்.

நியூயார்க்,

கடந்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு அதிக அளவில் கொரோனா தொற்று பரவுவதால், அமெரிக்காவின் நியூயார்க்கில் பேரிடர் அவசரநிலையை பிறப்பிப்பதாக கவர்னர் கதே ஹோச்சுல் அறிவித்துள்ளார்.

நியூயார்க்கில் கடந்த ஒரு மாத காலமாக நோய் தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு 300 க்கும் அதிகமானோர்  மருத்துவமனையில் அனுமதிக்கபடுவதாக  அரசாணை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனவரி 15, 2022 வரை நியூயார்க் மாநிலம் முழுவதற்கும்  பேரிடர் அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்பவதுடன், நோய் பரவுவதை தடுக்க தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்படும்.  


Next Story