ரஷ்யா- அரசு அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி


ரஷ்யா- அரசு அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி
x
தினத்தந்தி 7 Dec 2021 7:28 PM GMT (Updated: 7 Dec 2021 7:28 PM GMT)

ரஷ்யாவில் அரசு அலுவலகம் ஒன்றில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

மாஸ்கோ,

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரசு பொது சேவை அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். உள்ளூர் நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்கு பொதுமக்கள் மீது நடத்திய இந்த திடீர் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பத்து வயது சிறுமி உட்பட நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் குற்றவாளியை பிடித்து விசாரித்ததில் அவர் மாஸ்கோவில் வசிக்கும் 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா எனபது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியின் அடையாளம் மற்றும் துப்பாக்குச்சூடு நடத்தியதற்கான காரணத்தை போலீசார் வெளியிடவில்லை. 

ரஷ்யாவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது அரிதான ஒன்று ஆகும். அங்கு நவம்பர் 2020 இல், மாஸ்கோவின் தெற்கே வோரோனேஜ் நகருக்கு அருகிலுள்ள ஒரு இராணுவ தளத்தில் 20 வயதான சிப்பாய் ஒருவர் மூன்று சக இராணுவ வீரர்களைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

Next Story