அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Dec 2021 11:05 PM GMT (Updated: 7 Dec 2021 11:05 PM GMT)

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வாஷிங்டன், 

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கிழக்கு கொலம்பஸ் நகரில் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையத்தை நடத்தி வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் குமார் படேல்.

45 வயதான இவர் நேற்று முன்தினம் காலை வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதற்காக தனது கியாஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள வங்கிக்கு சென்றார்.

இதனை அறிந்து அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், அமித் குமார் வங்கிக்குள் நுழைவதற்கு முன் அவரை துப்பாக்கியால் சுட்டு வீழத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன்பின்னர் அந்த மர்ம நபர் அமித் குமார் வங்கியில் டெபாசிட் செய்ய வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

Next Story