ஜெர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 48,550 பேருக்கு தொற்று..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 Dec 2021 5:52 PM GMT (Updated: 8 Dec 2021 5:52 PM GMT)

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மோசமாக பாதிப்பு அடைந்துள்ளன.

பெர்லின்,

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. சில நாடுகளில் 3-வது அலையும், சில நாடுகளில் 4-வது அலையும் ஏற்பட்டது. ஜெர்மனியில் தற்போது ஏற்பட்டிருப்பது 4-வது அலையாகும் என கூறப்படுகிறது.

இந்தநிலையில்,  ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48 ஆயிரத்து 550 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் அந்த நாட்டில் இந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 63 லட்சத்து 19 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 451 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதுவரை அங்கு 1 லட்சத்து 04 ஆயிரத்து 812 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
 
கொரோனா பாதிப்பில் இருந்து 52,25,700 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 9,88,799 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Story