310 கிலோ எடை மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல் - இலங்கையில் கண்டுபிடிப்பு


310 கிலோ எடை மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல் - இலங்கையில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 9:43 AM GMT (Updated: 15 Dec 2021 9:43 AM GMT)

தேசிய ரத்தினம் மற்றும் நகை ஆணையம் இந்த ரத்தினத்திற்கு சான்றளித்து, சர்வதேச சந்தையில் இதை விற்க அனுமதி அளித்துள்ளது.

கொழும்பு ,

சுமார் 310 கிலோ எடை மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல்  இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இலங்கையின் மாணிக்க நகரம் என்றும் அழைக்கப்படும் இரத்தினபுரியில்  மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த அரிய ரத்தினக் கல் கண்டுபிடிக்கப்பட்டது. இது இலங்கையின் தலைநகரான கொழும்பில் இருந்து 85 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

அரசு நடத்தும்  தேசிய ரத்தினம் மற்றும் நகை ஆணையம் மிகவும் மதிப்புமிக்க விலைமதிப்பற்ற இந்த நீல ரத்தினத்திற்கு  சான்றளித்து, சர்வதேச சந்தையில் இதை விற்க அனுமதி அளித்துள்ளது.

இரத்தினக்கல்லில் இன்னும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :

இதற்குள் இன்னும் சுத்தமான கற்கள் இருக்கக்கூடும், ஏற்கனவே ஒன்று அல்லது இரண்டு சுத்தமான கற்களை  வெளியில் இருந்து பார்க்க முடிகிறது. அதனால் இந்த இரத்தினக்கல்லில் இன்னும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது குறித்து ரத்தின நிபுணர் சமிலா சுரங்கா, "அலுமினியம் ஆக்சைடு, டைட்டானியம், இரும்பு, நிக்கல் உள்ளிட்டவை இந்த ரத்தினத்தின் சிறப்பு. நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த ரத்தினத்தை உலகிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் சர்வதேச சந்தையில் அதிக தொகைக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது," என்று  கூறினார்.

Next Story