சைப்ரஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Jan 2022 2:22 AM GMT (Updated: 11 Jan 2022 2:22 AM GMT)

சைப்ரஸ் நாட்டில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிகோசியா,

சைப்ரஸ் நாட்டின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம், லிமாசோலுக்கு வடமேற்கே மேற்கே 111 கிமீ தொலைவில் 2 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 6:37 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்பட்டதாக தகவல் இல்லை.


Next Story