200 மில்லியன் ஆண்டுகளில் இலங்கை மறைந்து இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும் -ஆய்வில் தகவல்


200 மில்லியன் ஆண்டுகளில் இலங்கை மறைந்து இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும் -ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 12 Jan 2022 9:44 AM GMT (Updated: 12 Jan 2022 9:44 AM GMT)

200 மில்லியன் ஆண்டுகளில் இலங்கை மறைந்து புதிய இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்கன் ஜெர்னல் ஆப் சயின்ஸ் இதழில் உட்ரெக்ட் பல்கலைக்கழக புவியியலாளர் பேராசிரியர் டூவே வான் ஹின்ஸ்பெர்கன் ஒரு ஆய்வுகட்டுரை எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

நமது பூமிக்கு  கீழே உள்ள டெக்டோனிக் தகடுகள்  தொடர்ந்து நகர்ந்து வருவதால் . அனைத்து கண்டங்களும் தொடர்ச்சியாக நகர்ந்து வருகின்றன. 

டெக்டோனிக் தகடுகள்  மெதுவாக ஆனால் நிச்சயமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து வருகின்றன.  இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில்,  கிழக்கு ஆப்பிரிக்கா (நவீன சோமாலியா, கென்யா, தான்சானியா மற்றும் மொசாம்பிக் உட்பட) மற்றும் மடகாஸ்கர் ஆகியவை இந்தியாவின் மேல் எழும்பும் இது ‘இந்தியாவின் நவீன மேற்குக் கடற்கரையில் நீண்ட மலைத்தொடரை உருவாக்குவதற்கும்’ வழிவகுக்கும்,

இந்தியாவின் மேற்கு கடற்கரை சோமாலய மலைகளால் மாற்றப்படும்.மும்பையில் கடல் இல்லாமல் போகும். கடல் இல்லாவிட்டாலும் மும்பை நன்றாக இருக்கும்.

டெல்லி "சோமாலயா மலைகள்" என்று அழைக்கப்படுவதன் அடிவாரத்தில் அமைந்திருக்கும். சீஷெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் தீவுகள் அனைத்தும் மேலே தள்ளப்பட்டு மும்பை சோமாலயா மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் என்று ஆய்வுக் குழு குறிப்பிட்டது. அது முழு கடலோரக் கோட்டையும் மாற்றும். மொகடிசுவும் மும்பையும் இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் அண்டை நாடுகளாக மாறும். கொல்கத்தாவும் மொரீஷியஸும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கும்.

இன்று இருக்கும் இலங்கை மறைந்து புதிய இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும்.

இதுகுறித்து டாக்டர் வான் ஹின்ஸ்பர்கன்  கூறியதாவது:-

எதிர்கால மலைகள் மற்றும் கண்டங்கள் எப்படி இருக்கும் என்பதற்கான விடை தற்போது எங்களிடம் உள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் காணாமல் போன ஒரு கண்டம், தென்கிழக்கு ஆசியாவில் காணாமல் போன மற்றொரு பெரிய கண்டம், அதன் நினைவுச்சின்னங்கள் இந்தோனேசியா முழுவதும் காணப்படுகின்றன

தென்மேற்கு இந்தியா  திருவனந்தபுரத்திலிருந்து கராச்சி வரை ஒரு அழுத்தம் ஏற்படும். சோமாலியாவை உள்ளடக்கிய ஆப்பிரிக்காவின் மேல் பகுதி தென்மேற்கு இந்தியாவின் மீது மேலெழுந்து  பெரிய மலைப் பகுதியை உருவாக்கும்.



Next Story