பிரான்சை புரட்டி எடுக்கும் கொரோனா: ஒரேநாளில் 3 லட்சம் பேருக்கு தொற்று உறுதி...!


பிரான்சை புரட்டி எடுக்கும் கொரோனா: ஒரேநாளில் 3 லட்சம் பேருக்கு தொற்று உறுதி...!
x
தினத்தந்தி 14 Jan 2022 11:47 PM GMT (Updated: 15 Jan 2022 2:01 AM GMT)

பிரான்சில் புதிதாக 3,29,371 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாரிஸ்,

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா புதுப்புது அவதாரம் எடுத்து மக்களை வேட்டையாடி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரான்ஸ் தற்போது 5-வது இடத்தில் நீடிக்கிறது. 

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 371 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 35 லட்சத்து 69 ஆயிரத்து 675 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒரே நாளில் 191 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,26,721 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 89,61,841ஆக உயர்ந்துள்ளது. தற்போது 44,81,113 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story