13 நாட்களில் 4-வது முறை ஏவுகணை சோதனை - அடாவடி காட்டும் வடகொரியா


13 நாட்களில் 4-வது முறை ஏவுகணை சோதனை - அடாவடி காட்டும் வடகொரியா
x
தினத்தந்தி 18 Jan 2022 6:52 AM GMT (Updated: 18 Jan 2022 6:52 AM GMT)

வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனை செய்துள்ளது.

பியோங்யங், 

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்துவரும் நாடு வடகொரியா. 

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் வடகொரியா தனது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.

தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை கடந்த 5-ம் தேதி வடகொரியா பரிசோதனை செய்தது. அந்த சோதனையை தொடந்து கடந்த 11-ம் தேதி ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி 2-வது பரிசோதனை செய்தது. இதனையடுத்து, கடந்த 15-ம் தேதி ரெயிலில் இருந்து இரண்டு ஏவுகணைகளை ஏவி 3-வது முறையாக பரிசோதனை செய்தது.

இந்நிலையில், வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது. 13 நாட்களில் வடகொரியா மேற்கொள்ளும் 4-வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும். ஏவப்பட்ட பின்னர் வானில் இருக்கும்போதே இலக்குகளை தேர்தெடுத்து அழிக்கும் வகையிலான ’டேக்டிகள் கைடட்’ ஏவுகணையை பரிசோதித்துள்ளதாக வடகொரியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ள போதும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருவது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Next Story