கொரோனாவுடன் வாழ மக்கள் கற்று கொள்ள வேண்டும்; தொற்று நோய் நிபுணர் பேட்டி


கொரோனாவுடன் வாழ மக்கள் கற்று கொள்ள வேண்டும்; தொற்று நோய் நிபுணர் பேட்டி
x
தினத்தந்தி 18 Jan 2022 7:58 PM GMT (Updated: 18 Jan 2022 7:58 PM GMT)

கொரோனாவுடன் வாழ மக்கள் கற்று கொள்ள வேண்டும் என பிரபல தொற்று நோய் நிபுணர் பேட்டியில் கூறியுள்ளார்.



புதுடெல்லி,


உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.  இந்த பாதிப்பில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலை காணப்படுகிறது.  இந்த நிலையில், அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலை கழகத்தின் தொற்று நோய் பிரிவு தலைவர் பஹீம் யூனுஸ் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், கொரோனாவுடன் வாழ நாம் கற்று கொள்ள வேண்டும்.  இதற்கு, கொரோனாவுக்கு எதிரான பாதுகாவலை கைவிட வேண்டும் என அர்த்தம் இல்லை.

நாம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.  ஆபத்து சூழலை தவிர்க்க பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும்.  இசை கச்சேரிக்கோ அல்லது மதுபான விடுதிக்கோ செல்வது இன்றியமையாத ஒன்றல்ல.  ஆனால், நம்முடைய பெற்றோரை கவனிப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.

நல்ல தரமுள்ள முக கவசங்களை அணிவது மற்றும் முழு அளவிலான தடுப்பூசி செலுத்தி கொள்வது ஆகியவற்றால் கொரோனாவுடன் நாம் வாழ முடியும்.  அவை மரணம் ஏற்படாமல் தடுக்கும்.  மருத்துவமனையில் சிகிச்சை பெறாமலும் தடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.




Next Story