ஆஸ்திரியா: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்க லாட்டரி பரிசு அறிவிப்பு..!


ஆஸ்திரியா: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்க லாட்டரி பரிசு அறிவிப்பு..!
x
தினத்தந்தி 20 Jan 2022 9:59 AM GMT (Updated: 20 Jan 2022 9:59 AM GMT)

ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் லாட்டரி பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

வியன்னா,

ஆஸ்திரியாவின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 72 சதவீத மக்கள் கொரோனாவுக்கு எதிராக முழுமையான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரியா குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது. 

இந்த நிலையில் ஆஸ்திரிய அரசு பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் லாட்டரி சீட்டை அறிமுகப்படுத்த உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆஸ்திரியாவில் கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் தொற்று அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் ஆஸ்திரியா அரசாங்கம் மற்றுமொரு ஊரடங்கைத் தவிர்க்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி பொதுமக்கள் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும் இனிமேல் தடுப்பூசி செலுத்துபவராக இருந்தாலும் ஒவ்வொரு டோஸ் தடுப்பூசிக்கும் ஒரு லாட்டரி டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்துபவர்கள் 3 லாட்டரி டிக்கெட்டுகள் பெற்றுக்கொள்ள முடியும். 

ஒவ்வொரு பத்தாவது லாட்டரி டிக்கெட்டுக்கும் 500 யூரோக்கள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 42 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.
 
மேலும் ஆஸ்திரியா அடுத்த மாதம் முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்க உள்ளது. இதற்கான மசோதா இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story