சீனாவில் புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


சீனாவில் புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 23 Jan 2022 4:05 PM GMT (Updated: 23 Jan 2022 4:05 PM GMT)

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீஜிங்,

சீனாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 37 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 19 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 34 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,05,603 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story