ஹாங்காங்கில் பரவும் கொரோனா...ஏர் இந்தியா எடுத்த அதிரடி முடிவு!
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
ஹாங்காங்,
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளை சேர்ந்த விமான பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து, அதில் பாதிப்பு இல்லை என்ற உறுதிச்சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்த சேவையை கருத்தில் கொண்டு, ஹாங்காங்கிற்கான விமானசேவை ரத்துசெய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story